Friday, 30 January 2009

முத்து நீ எங்கள் சொத்து


எம் மண்ணின் வாசனை முகரவில்லை
எம் மக்களுடன் நீ உறவாடவில்லை
இருந்தும்
உன் உயிரை கொடையாக்கினாய்
எமக்காக
எம் விடிவுக்காக

சட்டக் கல்லூரி மாணவர்
சாகும் வரை உண்ணாது
இருந்தும்
சட்டை செய்யவில்லை எம்மை
சகலரும்

நெருப்பை நீ
உன் மீது வைக்கவில்லை
எல்லோர் மனங்களிலும்
எரியவிட்டுள்ளாய்
கவிதை வாசித்துக் கொண்டு
வெருமனே இருப்பவரானாலும் சரி

தொப்புள் கொடி உறவா
எம் மக்கள் படும் வேதனையா
எது உன்னைத் தூண்டியது
இந்த முடிவை எடுக்க


பெற்றோரை விட்டு உற்றோரை விட்டு
உன் சேய் நாட்டுக்காக
உன் உயிரைக் கொடுத்த நீ
சாதரண மனிதன் அல்ல
உண்மையிலேயே நீ
எங்களுக்கு கிடைத்த முத்து

இனி நீயும் எங்களில்
ஒருவன்
உனக்கும் எங்கள் மனம்
மாவீரர் நாளில்
புகழ் பாடும்
பூ சொரியும்
உனக்கு எங்களின்
வீர வணக்கங்கள்